திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி

268 0

வடமலை ராஜ்குமார், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முதலாம் தர மாணவியான 6 வயதுடைய உதயராஜன் அஞ்சனா என்ற சிறுமியே, இவ்வாறு பலியாகியுள்ளார். இச் சிறுமியின் உயிரிழப்புடன், திருகோணமலை மாவட்டத்தில் டெங்குவினால் பலியானோர் தொகை, 15 பேராக உயர்ந்துள்ளது. திருகோணமலை பிரதேச சுகாதாரப் பிரிவில், 440 பேர், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .