பிலிப்பைன்சில் விபத்து – 14 பாடசாலை மாணவர்கள் பலி

247 0

பிலிப்பைன்சில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.

குறித்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து கொங்கிரீட் தூண் ஒன்றுடன் மோதுண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் மாணவர்களே இவ்வாறு பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.