பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் (காணொளி)

378 0

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பதற்கான  திட்ட முன்மொழிவுகள் மற்றும் அமைவிடம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட மாகாண நகர அபிவிருத்திப் பணிப்பாளர், வடமாகான தனியார் போக்குவரத்து சபைத்தலைவர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகத்தர்கள், மாவட்ட வீதி அதிகார சபை  உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேச செயலாளர், கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் பேருந்து  நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினையும் கலந்துரையாடலில் ஈடுபட்ட குழுவினர் பார்வையிட்டனர்.