கசிப்பு உற்பத்தி முறியடிப்பு

252 0

unnamed-1கிளிநொச்சி கல்மடுநகர் சுடலைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 5 பெரல் கோடாவும், 20,000 மில்லி லீட்டர் கசிப்பும் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.