தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு மட்டக்களப்பு மாவட்டம் கல்லடிவெட்டைப் பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (23.11.2022)உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர்களை பெற்றெடுத்தோர் மற்றும் உறவுகள் சுடரேற்றி உணர்வுடன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
செல்வன். சாம் இம்மானுவேல் லெஸ்லி, டோட்முன்ட் தமிழாலயம் -மாவீரர் கவிதை. மாவீரச் செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவ அழைப்பு விடும் செல்வன். சாம் இம்மானுவேல் லெஸ்லி.
தீக்குள் ஆழ்ந்த தியாகப் பிறவிகள்! ————————————————— மாவீரர் நாள் நெருங்க! நெருங்க! அழ்மனதை உலுக்கிடும் காட்சிகள் விரிகின்றன… சுற்றிச் சூழ்ந்த கொடுங் கோலர் படை… பற்றி எரியும் தமிழர்கள் சொத்துக்கள் பரவி அமிழ்த்தும் கந்தக நெடில்… குஞ்சுகள் பிஞ்சுகள் முதியோர்கள் ,…