மத்தியவங்கியின் பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை திரிவுபடுத்தி, இந்த அரசாங்கம் செய்துள்ள அநியாயாத்தை மக்களுக்கு நாளை தெரியப்படுத்தவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய சாமுவேல் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மேஜர் வேட்பாளருமான சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
ஜனாதிபதியாக நான் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டபோது, வெளிநாட்டுக் கடன்களின் அளவு தற்போதைய வெளிநாட்டுக் கடன்களின் அளவை விட அதிகமாக காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று பெற்றோரால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.