நிலையவள்

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு அரசாங்கத்தின் சதி- டளஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Posted by - May 8, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகள் நீக்கப்படுவது அரசாங்கத்தின் சதிகார நடவடிக்கையாகும் என கூட்டு எதிர்க் கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும்…
மேலும்

நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் – திணைக்களம்

Posted by - May 8, 2017
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தெற்கு மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரங்களில் காலை வேளையில் மழை பொழியக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேற்கு,…
மேலும்

சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - May 8, 2017
மட்டக்களப்புக்கு கரடியனாறு  பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் மயிலம்பாவெளி விசேட அதிரடி படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மணல் அகழ்விற்கு பயன்பபடுத்தப்பட்ட 3 உழவு இயந்திரங்களையும் விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில்…
மேலும்

சம்மாந்துறையில் நபரொருவரின் சடலம் மீட்பு

Posted by - May 8, 2017
அம்பாறை – சம்மாந்துறை தொழில்நுட் பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்து முதலைகளால் கடிக்கப்பட்ட காயங்களுடன் கூடிய நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தை கண்ட பிரேதசவாசி ஒருவரால் இது தொடர்பில் காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அதே…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லை – ருவன் விஜேவர்தன

Posted by - May 8, 2017
அரசியல் பழிவாங்கலுக்காக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லையென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். புலனாய்வு பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே இந்த பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக…
மேலும்

இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

Posted by - May 8, 2017
இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று புதுடெல்லியில் இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்திய…
மேலும்

இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் கருத்த தெரிவித்த முன்னாள் எம்.பி மு.சந்திரகுமார்(காணொளி)

Posted by - May 7, 2017
இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் கருத்த தெரிவித்த முன்னாள் எம்.பி மு.சந்திரகுமார், நல்லாட்சியை கொண்டுவந்தால் பாலும், தேனும் ஓடும் என்றவர்கள் மக்களுக்கு எதுவும் பெற்றுக்கொடுக்காத சூழ்நிலையில் தாங்களும் இந்த நல்லாட்சியில் சேர்ந்து போராட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும்

இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா(காணொளி)

Posted by - May 7, 2017
இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித்; தலைவர் சி.தவராசா தெரிவித்தார். இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும்

கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்களை; சி.தவராசா மற்றும் மு.சந்திரகுமார் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்(காணொளி)

Posted by - May 7, 2017
கிளிநொச்சி இரணைமாதாநகர் பகுதியில் தமது பூர்வீக நிலமான இரணைதீவில் மீள்குடியேற்றக்கோரி இன்று 7ஆவது நாளாக இரணைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறித்த மக்களை வடக்கு மாகாண எதிர்க்கட்சித்; தலைவர் சி.தவராசா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது(காணொளி)

Posted by - May 7, 2017
வவுனியாவில் 73 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியுமே…
மேலும்