கிளிநொச்சியில் 450 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு(காணொளி)

381 0

new-pictureபுலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு முதல் பல்வேறு உதவிகளை ஆற்றிவருகின்ற கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 450 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை இன்று.கிளிநொச்சியில் வழங்கி உள்ளது.

இன்று காலை ஒன்பது மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

குறித்த நிறுவனமானது வடக்குக் கிழக்கில் தனது சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட குறித்த 450 மாணவர்களுக்கும் கல்வி ஊக்குவிப்பு நிதியாக தலா 500 ரூபாவினை வழங்கி வருகிறது.

அத்துடன் மூன்று மாதத்திற்கான ஊக்குவிப்புத் தொகையை ஒன்றுதிரட்டியே குறித்த மாணவர்களுக்கு இன்று பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவன பிரதிநிகள் மாணவர்கள் , நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்