கோத்தாவை வீட்டுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றாலும், மாற்றத்தை அடைய வேண்டும் என்ற அவர்களின் ஒட்டுமொத்த இலக்கை அடைவது சாத்தியமா என்ற கேள்விதொடர்பாக இளைய தலைமுறையினர் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் வந்து இறங்கினர். இன்று (25) வரை 75 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்காலத்தில் மூட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சீமெந்து மூடை ஒன்றின் விலையை 400 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவுக்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
பருத்தித்துறையில் உள்ள சதொசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கொழுத்தும் வெயிலிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டு அடைந்துள்ள அராஜக நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றால், தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச ராஜகருண தெரிவித்துள்ளார்.