நாட்டை மீட்டெக்க வேண்டுமாயின் அரசாங்கம் பதவி விலக வேண்டும்

254 0

நாட்டு அடைந்துள்ள அராஜக நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றால், தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச ராஜகருண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் 69 லட்சம் மக்களை ஏமாற்றி அரசாங்கம் கைப்பற்றி, தமக்கு எதிரான வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டதை மட்டுமே செய்தனர்.

மீதம் இருக்கும் வழக்குகளில் இருந்து விடுதலை பெறவே இன்னும் இருந்து வருகின்றனர். மல்வானை காணி போன்ற வழக்குகள் இன்னும் இருக்கின்றன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க முடிந்தளவுக்கு காலத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

ராஜபக்சவினர் எந்த வழக்குகளில் இருந்து விடுதலையானாலும் நாங்கள் மீண்டும் சுதந்திரமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நாட்டை அராஜக நிலைமையில் இருந்து மீட்க வேண்டுமாயின் தயவு செய்து பதவி விலகுங்கள் என ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.