உணவுப்பொதி மற்றும் தேநீர் கோப்பை ஒன்றின் விலைகளை திங்கட்கிழமை (8) குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்.ஒரு காலத்தில் அரசியல் ரீதியில் குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்து தற்போது அவதானம் செலுத்த கூடாது என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுவர்தன தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிராக ஜனநாயகத்திற்கான இலங்கையர்கள் என்ற குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பலமாதபோராட்டங்களின் பின்னர் மக்களிற்கு கிடைத்த மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றி…
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார வல்லுநருமான, ரகுராம் ராஜன் ராய்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் உரையாற்றிய போது, பெரும்பான்மையினவாதம் குறித்து, இலங்கையை தொடர்புபடுத்தி கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
சீனா கப்பலின் இலங்கை விஜயத்தை பிற்போடவேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளிற்கு சீன அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன்,நாமல்,பவித்ரா,சந்திரசேன,ரோஹித,லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.
யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர்.
சிங்கள இனவழிப்பு ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார்.