எகிப்திய இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் – 30 பேர் பலி

417 0

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 30 பேர் மரணித்தனர்.

சினய் தீபகற்பத்தில் உள்ள இராணு சோதனை முகாம் ஒன்றின் மீது நூற்றுக்கும் மேறப்பட்ட தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 6 இராணுவத்தினர் மரணித்ததுடன், 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதன்போது எகிப்திய இராணுவத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தின் முன்னாள் தலைவர் முஹம்மது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர்  எகிப்தின் பல பகுதிகளில் தீவிரவாதிகளின் வன்முறை செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment