மண்சரிவு எச்சரிக்கை தொடர்கிறது.

270 0

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இரத்தினப்புரி, காலி, மாத்தறை, நுவரெலியா, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மழையுடனான காலநிலை இன்று சற்று குறைவடையும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

முகில் கூட்டம் காணப்படும் என்றாலும் மழை குறைந்த காலநிலையே நிலவும் எனவும் காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.

Leave a comment