நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஈரான் நாட்டு கப்பல் புறப்பட்டது

519 0

எண்ணூர் துறைமுகத்தில் விபத்துக்குள்ளான மேப்பிள் என்ற கப்பல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஈரானுக்கு இன்று புறப்பட்டது.

ஈரான் நாட்டைச் சேர்ந்த மேப்பிள் என்ற கப்பல் எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு வந்தபோது டான் காஞ்சிபுரம் என்ற கப்பலுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
கடந்த ஜனவரியில் நடந்த இந்த விபத்தால் எண்ணூர் துறைமுக கடல் பரப்பில் கச்சா எண்ணெய் கொட்டியது. இதனால் கடல் நீர் மற்றும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்பு அடைந்தனர்.
பாதிப்பு அடைந்தவர்களுக்கு விபத்தை ஏற்படுத்திய மேப்பிள் கப்பல் உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து கப்பல் நிறுவனம் சார்பில் 203 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கியது. இதைதொடர்ந்து, மேப்பிள் கப்பலை ஈரான் நாட்டுக்கு திரும்பச் செல்ல அனுமதிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஈரான் நாட்டின் மேப்பிள் கப்பல் இன்று சென்னை துறைமுகத்தில் இருந்து ஈரானுக்கு புறப்பட்டு சென்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment