அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முடக்கல் போராட்டம்  

558 0

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்றையதினம் வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 அரசியல் கைதிகள், தங்களின் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி, இன்றைய நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தாமும் ஆதரவளிப்பதாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தவிடயத்தை முன்னிறுத்தி கொழும்பிலும் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

இது குறித்த விபரங்களை அரசியல் கைதிகளை விடுவிக்கும் இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் வழங்குகிறார்.

Leave a comment