காங்கேசன்துறை கடற்பரப்பில் 153 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

304 0

காங்கேசன்துறை கடற்பரப்பிற்குட்பட்ட பகுதியில் அநாதரவாக பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலினையடுத்து அங்கு சென்ற கடற்படையினர் குறித்த பொதியை மீட்டு சோதனை மேற்கொண்ட வேளையிலேயே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சாவினை கடத்திவந்த நபர்கள் தமது வருகையை அறிந்து அதை கைவிட்டு சென்றிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சா தற்போது யாழ் காங்கேசன்துறைபொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment