அரசியல் கைதிகள் விவகாரம் ; சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

14296 0

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார்.

தங்­க­ளு­டைய வழக்­கு­களை அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து மீண்டும் வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு சட்­ட­மா­திபர் திணைக்­களம் மாற்ற வேண்டும் என்னும் நியா­ய­மான கோரிக்­கையை முன்­வைத்து அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உள்ள  மூன்று அர­சியல் கைதிகள் தொடர்  உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதிக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment