நேற்றைய விபத்து நிகழ்ந்த பகுதியில் இன்றும் ஒருவர் மோதுண்டு பலி!

228 0

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று 12.10.2017 இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்

 நேற்று  சாரதியின்  நித்திரையால் பாலத்துடன்  மோதுண்ட சொகுசு பேருந்து விபத்தில் இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 11.10.2017 நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் விபத்தில் சிக்கியிருந்த பேருந்து அகற்றப்படாமையாலேயே  இன்று குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கதாகும். குறித்த விடயம் தொடர்பில் வீதி போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவில்லை என பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment