அரசியல் கைதிகளின் உறவினர்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில்……………..(காணொளி)

417 0

வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே தமது வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த மாதம் 25 ஆம் திகதியில் இருந்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தமது வழக்குகள் அனுராதபுரம் சிறப்பு நீதி மன்றத்திக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழ் அரசியல் கைதிகளான வடமராட்சி கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்சன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள், மற்றும் கணேசன் தர்சன் ஆகியோர் நேற்று 17ஆவது நாளாக உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment