மானிப்பாய் வாள்வெட்டு சம்பவம்

374 0

மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் கூழாவடி பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்தி வாளால் வெட்டிய சம்பவம் இடம்பெற்றது.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அதே இடத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.

அதில் இருவர் குறித்த சம்பவத்துடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்று விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 5 பேரும் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், இதன்போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a comment