நீதிமன்ற சட்டத்தை மீறியவரை தாக்கியது தவறல்ல- அஜித் பி. பெரேரா

259 0

ஹம்பாந்தோட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அரசாங்கமும் அனுமதிப்பதில்லையென பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

அடிவாங்கிய நபர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஒர் ஊடகவியலாளராக கலந்துகொண்டாரா அல்லது ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவராக கலந்துகொண்டாரா என்பதில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸினால் கைது செய்யப்பட்ட ஒருவர் மீது தாக்குதல் நடாத்த சட்டத்தில் இடமில்லையெனினும், நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குத்ல நடாத்துவது குற்றமாகாது எனவும் பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.
கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment