மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்.(காணொளி)

271 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று இரவு இளம் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயவீதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி என்னும் ஐந்து வயது பிள்ளையின் 26 வயது தாயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கட்டிலில் தூங்கியவாறே உயிரிழந்த நிலையில் தமது சகோதரி காணப்பட்டதாக உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்தார்.

குறித்த பெண் உயிரிழந்த பகுதியில் உள்ள வீட்டு மோட்டுவளையில் கயிறு ஒன்று தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கொக்;கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சகோதரியின் பாடசாலை நண்பன் ஒருவர் குறித்த வீட்டில் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குறித்த பட்டிப்பளை இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பெண் உயிரிழந்த வீட்டுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களை தாக்கமுட்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் சந்தேகிக்கப்படும் இளைஞரை கைதுசெய்யாமல் அவரை காப்பாற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினை பெருமளவான இளைஞர்கள் சூழ்ந்திருந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதை தொடர்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும், சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் தொடர்பில் விசாரணை நடாத்தப்படும் என பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து பொது மக்கள் கலைந்துசென்றுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment