காஞ்சிரம்குடா படுகொலை மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் நினைவேந்தல்(காணொளி)

293 0

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த தமிழ் இளைஞர்கள் 7 பேரின் 15வது நினைவேந்தலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 12வது நினைவேந்தல் நிகழ்வும் நேற்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஆ.ஜேன்சனின் தலைமையில், திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் முன்பாகவுள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நேற்று மாலை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் சமாதிக்கு அவரது மனைவி மாலையிட்டு தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், 7 இளைஞர்களின் சமாதிக்கு அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஆலோசகர் தம்பையா யோகேஸ்வரன் உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் மட்டு, அம்பாறை இணைப்பளர் ஆர்.டிஸ்கரன் முன்னாள் போராளிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 2002ஆண்டு 10 மாதம் 09ஆம் திகதி காஞ்சிரம்குடா இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி திருக்கோவில் பிரதேசத்தினை சேர்ந்த மாணவர்கள் உட்பட 7 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment