இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

245 0

இந்த ஆண்டு செப்டம்பர் வரையில் இலங்கைக்கு 2 லட்சம் சீன சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்ததகவல்களை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது

கடந்த மாதத்தில் மாத்திரம் 18 ஆயிரம் சீனர்கள் இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளாக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு இந்த ஆண்டில் 1.5மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்ததாக அமைச்சு செய்திக்குறிப்பு ஒன்றி;ல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி இந்த வருட இறுதிக்குள் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்ட இலக்கான 2.5மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கை அடையமுடியும் என்றும் அமைச்சு எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது

சுற்றுலாப்பயணிகள் வருகை வரிசையில் இந்;தியா இரண்டாம் இடத்தையும் பிரித்தானியா மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.

இதற்கிடையில் இந்த ஆண்டில் மாத்திரம் சுற்றுலாப்பயணிகள் மூலம் 2 பில்லியன் அமரிக்க டொலர்கள் இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment