இன்று இலங்கை வரவுள்ளார்- பப்லோ டி கிரீப்

254 0

ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான விசேட அறிக்கையாளர்,  பப்லோ டி கிரீப் இன்று இலங்கை வரவுள்ளார்.

இன்று முதல் இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பார்.

இந்தக் காலப்பகுதியில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் அதுதொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் வடக்கு கிழக்கு, மலையகம் மற்றும் தென்பகுதிகளுக்கான விஜயங்களை மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

Leave a comment