ஹெரோயினுடன் உகாண்டா பெண், இலங்கையில் கைது

223 0

ஐநூறு கிராம் ஹெரோயினுடன் உகாண்டா நாட்டு பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று காலையில் பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தித் தளத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

43 வயதான குறித்த பெண் டுபாயில் இருந்து இலங்கை வந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 5 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment