குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

591 0

திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய கைதியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment