இடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாடு அடுத்த வாரம்

226 0

புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைபு அறிக்கையின் யோசனைகளையும் பரிந்துரைகளையும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்திற்கு கையளிக்கவுள்ளது.

புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் வெளிப்படையானதாக அமைய வேண்டும். சமஷ்டி முறைமைக்கு நாட்டை நகர்த்த கூடிய வகையில் பல்வேறு விடயங்கள் மற்றும் சொற்கள் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்த வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டார்.

Leave a comment