பிரஸ்சல்ஸ் தீவிரவாத எச்சரிக்கை : வெடிபொருட்கள் எதுவும் இல்லை

718 0

88888650_brussels5பிரஸ்சல்ஸில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட ஆணிடம் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை என, வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட ஆணே, பொலிஸாருக்கு அழைப்பு விடுத்து தன்னிடம் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, குறித்த பகுதியில் உள்ள விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாகவும் குண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், கைது செய்யப்பட்ட ஆண் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பிரஸ்சல்ஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரஸ்சல்ஸ் பிரதமர், “வெடிபொருட்கள் எதுவும் கைது செய்யப்பட்ட ஆணிடம் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பரபரப்பாக காணப்பட்ட சூழ்நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது” என தெரிவித்தார்.குறித்த சந்தர்ப்பத்தின் போது, பாதுகாப்பு படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட்டதாக உள்ளூர் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Leave a comment