வித்தியாவின் தாயை அச்சுறுத்திய சுவிஸ் குமாரின் தாய்க்கு பிணை மறுப்பு

5037 0

vithya-01-720x480புங்குடுதீவு மாணவி வித்தியாவின் அம்மாவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான சுவிஸ் குமாரின் தாய் மற்றும் உசாந்தனின் தாயாரை எதிர்வரும் 7 ஆம் மாதம் 5 ஆன் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று புதன்கிழமை காலை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.இதன் போது மண்றில் தோண்றிய சட்டத்தரணி இ.சபேசன் சந்தேக நபர்கள் 2 வரும் வெளி வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறவேண்டு உள்ளதால் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு விண்ணப்பித்தார்.

சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான், அவர்களுக்கான பிணை விண்ணப்பத்தை மேன்முறயீட்டு நீதிமனறத்தில் செய்யுமாறு வலியுறுத்தினார்.
அத்துடன் சந்தேக நபர்களுக்கு தேவைப்படும் அனைத்து வைத்திய தேவைகளையும் அவர்கள் விரும்பிய இடங்களில் சென்று பெற்றுக்கொள்ள வழிசெய்யுமாறு யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a comment