மத்திய வங்கியின் பிணைமுறி தகவல்களை வெளியிடுவதற்கு தாம் முட்டாள் இல்லை- அர்ஜுன் மகேந்திரன்

370 0

மத்திய வங்கியின் பிணைமுறி குறித்த முக்கியமான தகவல்களை வெளியிடுவதற்கு தாம் ஒன்றும் முட்டாள் இல்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு இடம்பெற்ற பிணை முறி விநியோகத்தின் மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் நேற்றைய தினமும் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிணை முறி குறித்த முக்கியமான தகவல்களை, தமது மருமகனான அர்ஜுன் அலோசியஸுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான முக்கியத் தகவலை வழங்குவதன் ஊடாக தமது 35 வருடகால வங்கி தொழிற்துறை வாழ்கை சிதைத்துக் கொள்வதற்கு தாம் ஒன்று முட்டாள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பதில் மன்றாடியார் நாயகம் டப்புல டி லிவேரா எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment