மகனை கொலை செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை

324 0

மல்வானை பிரதேசத்தில் நபரொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை பின்னர் அவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மல்வானை பிரதேசத்தின் வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பின்னர், தந்தை குறித்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

31 வயதுடைய இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்ட தந்தையின் வயது 74 என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment