யாழ்ப்பாணம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல் – இருவர் கைது

255 0

attackயாழ்ப்பாணம் – கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கையடக்க தொலைப்பேசி வர்த்தக நிலையம் மீது தாக்கல் மேற்கொண்டதாக

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உந்துருளியில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைப்பேசி வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவருக்கும் பிரிதொரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகறாரே இந்த சம்பவத்திற்கு காரணம் என காவற்துறையினரின் முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a comment