எவன்காட் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

215 0
எவன்காட் – மெரின்டய்ம் சேவை நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று இந்த குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்காக 355 லட்சம் ரூபாவை கையூட்டலாக வழங்கியமை மற்றும் கையூட்டல் பெற்றுக்கொண்டமை முதலானவை உள்ளிட்ட 47 குற்றங்கள் தொடர்பில் இந்த குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment