இந்திய எல்லையில் மேலும் இரண்டு சோதனை சாவடிகள்

508 0

இந்தியா தமது அயல் நாடுகளான மியன்மார் மற்றும் பங்களாதேஸ் எல்லைப் பிராந்தியங்களில் இரண்டு எல்லை சோதனை சாவடிகளை அமைத்துள்ளது.

இந்தியாவுக்குள் வரும் பங்களாதேஸ் மற்றும் மியன்மார் பிரஜைகள் இந்த சோதனை சாவடியில் பரிசோதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய உட்துறை அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதுடன், பரிசோதனை சாவடிகள் அமையும் இடங்கள் குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

உரிய கடவுச்சீட்டின் மூலம் இந்த சோதனை சாவடியின் ஊடாக பரஸ்பரம் பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது

Leave a comment