நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு: ரூ.20 ஆயிரம் கோடி உயர்வு

257 0

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

கிராமப்புற மக்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த 2012-2013-ம் நிதிஆண்டு பட்ஜெட்டில் ரூ.38 ஆயிரம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, கடந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.58 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். பயனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment