உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள்- வித்யாசாகர் ராவ்

313 0

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவினையொட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–
தீயசக்திகளை வெற்றி கொண்டதன் அடையாளமாக ஆயுத பூஜையும்; குழந்தைகள் தங்களின் கல்வியையும், இளைஞர்கள் தங்களின் புதிய முயற்சியையும் தொடங்கும் மங்களகரமான நாளின் அடையாளமாக விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன.
இந்த பண்டிகைகள் அறிவென்ற விளக்கை ஏற்றட்டும்; ஞானத்தையும் கல்வி அறிவையும் பரவச் செய்யட்டும்; புதிய முயற்சிகளையும் திறன் மேம்பாட்டையும் வளர்க்கட்டும்; வளம், செல்வம் உள்பட ஒட்டு மொத்த வளர்ச்சியை ஏற்படுத்தட்டும்.
தமிழகம் மற்றும் உலகத்தின் மற்ற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment