எக்காரணத்துக்காவும் வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கமாட்டோம்..!

422 0

இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை திறந்த கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தயராகவிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேநானாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிபதிகளை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையினால் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவத்தினர் செயற்பட வேண்டிய ஒழுங்குவிதிகளை பின்பற்றியே நாம் இதுவரை காலமும் செயற்பட்டு வந்துள்ளோம். அந்த தராதரங்களை நாம் எப்போதும் மீறியதில்லை.

அவ்வாறு ஏதேனூம் சந்தேகங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்த நாம் தயாராகவுள்ளோம். விவாத்திற்கும் நாங்கள் தயார்.

வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்பிற்காகவே இராணுவம் நிலைக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இராணுவ பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் குறைக்க முடியாது.

நாம் மக்களின் பாதுகாப்புக்காகவும் தனி நபர் உரிமைக்காகவுமே போராடுகிறோம் என்றார்.

Leave a comment