தமிழரசுக்கட்சியின் மகளிரணித் தலைவியாக சரவணபவன் எம்பியின் மனைவி? திரு சம்பந்தனின் உறவினர்

417 0

Capture-2இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மகளிரணித் தலைவியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மனைவியான யசோதராவை நியமிப்பதற்கு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் மகளிரணித் தலைவியாக இருந்துவந்த அனந்தி சசிதரனுக்கும் அக்கட்சிக்கும் நீண்டகாலமாக முரண்பாடுகள் இருந்துவந்த நிலையில் அண்மையில் அவரின் மகளிரணித்தலைவி பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நிலைத்திருக்கும் சாத்தியங்கள் குறைவாகக் காணப்படுவதால், தனது மனைவியை மகளிரணித் தலைவி பதவியில் அமர்த்தி தனது இருப்பை தக்கவைக்க முயற்சிப்பதாகவும் தெரியவருகின்றது.

இதன்காரணமாக தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கிற்குப் பயணம் செய்யும் வேளைகளில் யசோதரா நெருக்கம் காட்டிவருவதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் யசோதரா திரு சம்பந்தனின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.