வவுனியாவில் இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசம்!!

1099 0

வவுனியாவில் பல பகுதிகளில் இனந்தெரியாத இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம் புகையிரத வீதி, பூங்கா வீதி, நகரசபை வீதி, குட்சைட் வீதி, தோனிக்கல் போன்ற வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இவர்களின் அட்டகாசம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் பொதுமக்களிடமிருந்து நகைகள், பணம் என்பவற்றை அபகரிக்க முயன்றுள்ளனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மூன்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லையென வவுனியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment