வட மாகாண குற்றச்செயல்களை தடுப்பது குறித்து ஆய்வுக் கூட்டம்

14144 0

வட மாகாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று நேற்று யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செயற்பட்டு வந்த ஆவா குழுவின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் மது போதையில் வீதிகளில் மக்களுக்கு இடையூறு விளைவிப்போர் மற்றும் போதைவஸ்து பாவனையாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

தமிழ் பேசும் பொலிஸார் குறைவாகவே பணியில் இருப்பதனால் பணிகளை தமிழ் மொழில் மேற்கொள்வதில் சிரமம் நிலவுவதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

மேலும் அனுமதியற்ற வகையில் வீதி ஓரங்களில் இந்து, பௌத்த, கிறிஸ்த சமயங்களின் தெய்வங்களை அமைப்பதன் காரணமாக வீண் பிரச்சினைகள் சமூகங்களுக்கு இடையில் எழுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் றெஜினோல் குரே தமிழ்பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வடக்கு வாழ் தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள அனைத்து தரப்பினரும் இளைஞர் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய நகரங்கள் மற்றும் பொதுமக்கள் செறிந்திருக்கும் பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்காண்பதற்காக சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசித்துள்ளதாகவும். அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.

அனுமதியற்ற வகையில் வீதி ஓரங்கள் மற்றும் மரங்களின் கீழ் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வரும் சிலைகள் தொடர்பில் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சர் காமினி ஜெயவிக்கரம பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முக்கிய நகரங்கள் மற்றும் பொதுமக்கள் செறிந்திருக்கும் பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்காண்பதற்காக சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசித்துள்ளதாகவும். அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.

Leave a comment