வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டார் அனந்தி சசிதரன்(காணொளி)

639 0

வடக்கு மாகாண புனர்வாழ்வு மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை நேற்று மேற்கொண்டார்.

ஆசிக்குளம் ஓழிச்சுடர் சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் கற்குளம் படிவம் ஒன்றின் பொதுநோக்கு மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது.

ஆசிக்குளம் கிராம சேவகர் பிரிவில் 14 கிராமங்கள் காணப்படுவதோடு இதில் 10 கிராமங்கள் யுத்தத்தின் பின் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக் கிராமங்களின் பொருளாதார நிலைமையானது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதுடன் விசேட தேவைக்குட்பட்டவர்கள் 74 பேரும் பெண்களை தலைமைத்துவமாக கொண்;ட குடும்பங்கள் 300 காணப்படுகின்றன.

இவர்களுக்கான பொருளாதார விருத்தியை எவ்வாறு மேற்கொள்வது என கிராம மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கற்குளம் படிவம் ஒன்றைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment