சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் பலி

296 0

குடும்ப தகராறு காரணமாக பிட்டிகல காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் பலியானார்.

இந்தநிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறை மா அதிபரின் ஆலோசனையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிட்டிகல காவற்துறையின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சம்பவத்தில் பலியானவர் பிட்டிகல – மாரக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment