முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் உண்ணாப்பிலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை விட்டு வீடு சென்ற மாணவர்கள் மீது பிக்கப் வாகனம் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக முல்லைத்தீவு பொலிசார் விசாரணையை மேற்க்கொண்டு வருகின்றனர்.

