முல்லை பிரம்ம குமாரிகள் இல்ல கட்டட திறப்பு விழா இன்று சிறப்புற இடம்பெற்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தினை 5 5 வருட தவஜோகியும் வைத்திய கலாநிதியுமான நிர்மலா கஜாரியா அவர்களும் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் அவர்களும் இணைந்து நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகைதந்த 5 5 வருட தவஜோகியும் வைத்திய கலாநிதியுமான நிர்மலா கஜாரியா வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

