டெங்கு நோய் – இந்த ஆண்டு 390 பேர் பலி

197 0

டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 390 பேர் வரையில் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணித்தவர்களில் 68 சதவீதமானவர்கள் பெண்கள் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஹசிதா திசேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நோயினால் இந்த ஆண்டு டெங்கு நோயினால் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் நாளை முதல் எதிர்வரும் 26ம் திகதி நாடு முழுவதும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படுகிறது.

Leave a comment