இராணுவத்தால் மடுபகுதி தமிழ் வியாபாரிகள் பாதிப்பு

377 0

maduமன்னார் மடு பிரதேசசபைக்கு உட்பட்ட மடுவீதி பகுதியில் இராணுவம் பிரம்மாண்டமான வியாபார நிலையங்களை அமைத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள சாதாரணதர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மடுரோட் பகுதியில் இராணுவத்தினர் தங்களது பலத்தை வைத்து தமது வியாபாரங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் பலனாக அங்கு ஏற்கனவே வியாபார நிலையங்களை நடத்திவரும் வர்த்தகர்கள், அப்பகுதியின் தனியார் வியாபாரிகள் இராணுவத்தினரின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்களின் வியாபார நிலையங்களை மூடி தங்களது வாழ்வாதாரத்தை அழித்து கொண்டுள்ளனர்.

இதனை கேட்க யாரும் முன்வராத நிலையை நினைத்து மிகவும் மனம் வருந்துவதாகவும், இது போன்ற நிலை இங்கு மட்டுமில்லை வடக்கு, கிழக்கு முழுவதும் நிலவுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.