மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

279 0

யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரணையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிந்தார்.

இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள  காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாத நிலையில் இராணுவம் வெளியேறிய பின்னரே அதைப் பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் , ஏனைய துயிலும் இல்லங்களின் காணிகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a comment