சட்டவிரோத முதிரை மர பதுக்கல் – மரஆலை உரிமையாளர் கைது

318 0

சட்டவிரோதமான முறையில் 26 பாரிய முதிரை மரங்களைப் பதுக்கி வைத்திருந்து  மரஆலை உரிமையாளர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

காத்தான்குடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த முதிரை மரங்களின் பெறுமதி 5 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரியவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment