ஆயுதத்தைக் காட்டி மிரட்டி கொள்ளை

378 0

அகுணகொலபெலெஸ்ஸ – பரவகும்புர பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து 53,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

அம்பலன்தொட – பெரகம பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் உத்தியோகத்தர் ஒருவரால் குறித்த பணம் எடுத்துச்செல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளையே, இனந்தெரியாத இருவரால், கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அவர் வசம் இருந்து பணத்துடன் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டு மற்றும் டெப் கனணி ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. இது குறித்த மேலதிக விசாரணைகளை அகுணகொலபெலெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment